Thursday, December 20, 2012

பாலியல் பலாத்தாகாரம்

 
 அண்மையில் இந்தியாவின் தலைநகரில் இடம்பெற்ற பாடசாலை மாணவி மீதான பாலியல் பலாத்கார சம்பவம் சமுக வலைத்தளங்களில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த விடயம் தொடர்பாக எனது கருத்துப்பதிவு.

Wednesday, October 24, 2012

”ஆணாதிக்கம்” தலைவிரித்தாடுகிறது


அன்மைய காலங்களில் சமுக வலைத்தளங்களில் நான் அதிகம் பார்த்து வெறுப்படைந்த விடயங்களில் ஒன்றுதான் இந்த “ஆணாதிக்கம்” எனப்படும் பெண்ணடிமைத்தனம் சம்பந்தமான கருத்துக்கள். என்னை மிகவும் எரிச்சலடைய வைத்த விடயம் ஒன்று என்றே இதை சொல்லலாம். பொதுவாக என்மீதான பலரது கண்ணோட்டம் “அமரேஷ்” ஒரு “தடிச்ச ஆணாதிக்கவாதி” என்பதுதான். இந்த பெயரை நான் வாங்கவதற்கு நான் செய்த ஒரே ஒரு கைங்கரியம் பொண்ணடிமைத்தனத்தை ஆணாதிக்கம் என குறிப்பிடுவதை எதிர்த்ததும், பெண்ணடிமைத்தனத்தை ஒழிப்பதை விடுத்து அதற்கு எதிராக கூக்குரலிட்டு, பெண்ணடிமைத்தனத்திற்கு இலவசமாக விழிப்புணர்வு செய்வதை எதிர்த்ததும் தான்.

Sunday, September 16, 2012

வடக்கில் துடுப்பாட்டம்:-முற்றுமுழுதாக எனது தனிப்பட்ட பார்வை


ஓய்ந்துபோன போரினை தொடர்ந்து இலங்கையின் எல்லா மூலைகளிலும் இளம் சமுதாயம் முன்னேற்றத்தை நோக்கிய உழைப்பை முடக்கிவிட்டுள்ளது. விளையாட்டுத்துறை ஓரளவு துரித கதியில் முன்னேற்றப்படுவதாகவே புலப்படுகிறது. அதிலும் குறிப்பாக வடபகுதி விளையாட்டுத்துறையில் அதிக ஈடுபாட்டுடன் காணப்படுவது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயமே.

Sunday, July 1, 2012

பதிவிட தவறிய பழைய கவிதையொன்று

சிறுதீவின் தலையென்பது யாழ்மண்ணை
அதனிலும் தலையென்றொன்றுள்ளது
ரவுணென்று சொல்லுவர் அதை இங்கிலீசில்

Wednesday, June 27, 2012

JPL விமர்சனங்களும் தாற்பரியங்களும்-எனது பார்வையில்

நடந்து முடிந்த JPL-2012 நிகழ்வுகளில் நானும் ஒரு அறிவிப்பாளன் என்ற வகையில் இணைந்திருந்தேன். அந்த JPLன் நிறைவேற்று குழுவிலும் நான் ஒரு கிரிக்கட் ரசிகன் என்ற வகையில் உள்ளடக்கப்பட்டு இருந்தேன்.

ஏற்பாட்டாளர்களின் அடிப்படை சிந்தனை பற்றிய ஒரு வெளிப்பாடு தேவை என்ற வகையிலே எனது தனிப்பட்ட கருத்துக்களை இங்கே பதிவிட விரும்புகிறேன். (இது JPL இன் உத்தியோக பூர்வ அறிக்கை அல்ல. இது எனது தனிப்பட்ட கருத்து மாத்திரமே).

Wednesday, April 25, 2012

Alumni Fiesta-II (2012)

It was a wonderful night which all young past students of Jaffna Hind College were expecting. We started the celebration at around 5.30 pm at Veerasingham Hall, which is one of the historical landmarks in Jaffna. The hall decoration by the organizers of the Alumni Fiesta was awesome and the visitors felt like they were in Kumaraswamy Hall. The hall was covered with Blue and White curtains and number of bunches Helium Balloons in both blue and white color. 

Wednesday, November 23, 2011

களவும் கண்ணியமும்-பாகம்-3

இரண்டு பதிவுகள் களவும் கண்ணியமும் தலைப்பில் எழுதியாச்சு. கொஞ்சம் விவகாரமான தலைப்புத்தான் என்பது எழுத ஆரம்பித்ததன் பின்னரே என்னால் உணரக்கூடியதாய் இருந்தது. லேசாக மேடையில் சுவாரஸ்யமாக பேசிவிடலாம், ஆனால் அதை சரிபட எழுத்துமூலம் எடுத்துரைப்பது என்பது கொஞ்சம் சவாலான வேலைதான். ஏதோ என்னால் முடிந்தவரை முயற்சித்திருக்கிறேன். எனது எழுத்துக்களில் குறைந்தபட்ச சமுக இழையோட்டம் இருக்கவேணும் என்பது எனது ஆவல். அந்த வகையில் இந்த பதிவு நிறையவே சமுக பிரச்சனை ஒன்றை ஆராய்ந்திருக்கிறது என்ற நம்பிக்கை. இந்த மூன்றாம் பாகத்துடன் இந்த தொடரிற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றிருக்கிறேன்…

Monday, October 17, 2011

களவும் கண்ணியமும்- பாகம் 2


களவும் கண்ணியமும் பாகம்-1ற்கு கிடைத்த வரவேற்புகள் எனக்கு தந்த உத்வேகத்திலும் பார்க்க அதை பார்த்து முகப்புத்தகத்தில் நேரடியாக கருத்துக்கூற முடியாமல் தனிப்பட்ட செய்தி மூலம் பலர் தமது விரக்தியை வெளியிட்டமை என்னை பாகம் இரண்டை எழுதுவதற்கு தூண்டியது என்பது ஏதோ உன்மைதான். இருந்தாலும் பகிரங்க வரவேற்புக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது கொஞ்சம் மனக்கவலை….எண்றாலும் கைப்புள்ள சளைக்கலபாகம் 2 எழுதியாச்சு….

Wednesday, September 28, 2011

களவும் கண்ணியமும்


எழுதுவது என்பது எனது மனநிலையை பெறுத்த வரையில் விருப்பத்திற்கும் விருப்பத்திற்கும் இடையில் நடைபெறும் ஒரு சிறிய பாரத யுத்தம் தான். இந்தத்தடவை பல சங்கதிகளை விளக்கிக்கூறவேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுத ஆரம்பிக்கிறேன். அந்த வகையில் முதலில் என் மனநிலையில் நடக்கும் விருப்பத்திற்கும் விருப்பத்திற்கும் இடையிலான போரைப்பற்றி விளக்கிக்கூறுகிறேன்.

Friday, August 26, 2011

மண்வாசனை பகுதி2.1

சந்தோஷமாய் வாழ்ந்தோம்-நாம்
சங்கடங்கள் சந்தித்ததில்லை-வரினும்
சகோதரங்களும் சினேகிதங்களும்
சமாளித்து வைப்பார்கள்