தலையங்கம் நிச்சயமாக வில்லங்கமானது தான்.வில்லங்கங்களை பற்றி எழுதுவது எப்போதுமே சுவாரசியமானதும் கூட.
பதிவை எழுத ஆரம்பிக்க முன்னதாகவே எனது மனதில் ஒரு தெளிவும், ஒரு தெளிவின்மையும் ஊசலாடுகிறது.எனவே முதலில் அதை வாசகருக்கு ஒப்புவிப்பது சிறந்தது என நினைக்கிறேன்.
இண்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு இளைஞர் யுவதியினரும் வாழ்க்கையில் பலவித தெரிவுகளை சுயமாக மேற்கொள்வதற்கு பக்குவப்பட்டதாகவே கருதிக்கொள்கின்றனர்..அவற்றில் உன்மை வீதம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதில் எனக்கு தெளிவு இல்லை.